தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)

Thursday, August 2, 2012

லஞ்சம் வாங்குபவர்கள் பற்றி புகார் கொடுக்கணுமா?



தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை எளிதாகத் தொடர்பு கொள்ள உதவும் இணையதளத்தை வாசர்களுக்குக் கொண்டு செல்லும் கடமையுணர்வுடன் இந்தத் தகவலை வெளியிடுகின்றோம்.
லஞ்சம் எங்கு எங்கு எல்லாம் தலைவிரித்து ஆடுகின்றதோ அங்கு எல்லாம் சட்டம் வளைந்து நெளிந்து போகின்றது. இதனால் தான் பல குற்றச் செயல்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது. இது அரசின் தவறு அல்ல. ஒரு சிலரின் தவறே. நமது நாடு லஞ்ச லாவண்யம் இன்றி நேர்மையாக செயல்பட்டாலே உலக அளவில் முதன்மை நாடாகத் திகழும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
அரசு அதிகாரி ஒருவர் தன் கடமையைச் செய்ய லஞ்சம் கேட்கிறார் என்றால் அவரைப் பற்றி எங்கு எப்படிப் புகார் அளிக்க வேண்டும் என்று தெரியவில்லையா. உடனே http://www.dvac.tn.gov.in/ என்ற தமிழக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் இணையதளத்திற்கு சென்று பார்க்கலாம். அங்கு லஞ்சம் குறித்து யாரிடம் புகார் தெரிவிக்கலாம் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் முதல் செல்போன் எண் வரை அத்தனையும் இந்த இணையதளத்தில் தெளிவாக உள்ளது.

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்து வருவதைப் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பார்க்கிறோம். இந்த நிலையில் லஞ்ச பேய் பிடித்த அதிகாரிகள் குறித்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு தெரிவிப்பது நமது தலையாய கடமையாகும். இதைச் செய்ய பலருக்கும் குழப்பம், தயக்கம். அந்த குழப்பத்தையும், தயக்கத்தையும் போக்கியே ஆக வேண்டும்.
யாராவது அதிகாரி லஞ்சம் கேட்கிறாரா உடனே லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவியுங்கள். புகார் கொடுத்தால் என்னவாகுமோ என்று அஞ்ச வேண்டாம்.
--  thatstamil

Read More

Thursday, July 26, 2012

பனிமய மாதா ஆலய திருவிழா கொடியேற்றம்


ஆன்மிக சிறப்புவாய்ந்த தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.தூத்துக்குடி மாநகரில் கடற்கரையோரம் அமைந்துள்ள 457 ஆண்டுகள் பழமைவாய்ந்த தூய பனிமய மாதா கேட்டவர்களுக்கு கேட்டவரம் தருவதால் ஆன்மிக சிறப்பு வாய்ந்த தலமாக விளங்குகிறது. உலகம் முழுவதும் சிறப்புபெற்றுள்ள தூய பனிமய மாதா ஆலயம் கடந்த 1982ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் நாள் பசிலிக்கா பேராலயம் என்ற சிறப்பு நிலைக்கு உயர்ந்தது.
சிறப்புமிக்க தூய பனிமய மாதா பேராலயத்திருவிழா ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பங்கு மக்களால் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டிற்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. முன்னதாக நேற்றுமுன்தினம் மாலை திருச்சிலுவை சிற்றாலயத்தில் இருந்து காணிக்கை மற்றும் கொடிபட்ட பேரணி பங்குதந்தை வில்லியம்சந்தானம் தலைமையில் நடந்தது. இதில் எளியோருக்கும், திருவழிபாடு, பள்ளிக்குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் பங்குமக்களால் காணிக்கையாக அளிக்கப்பட்டு ஆலயத்திற்கு பேரணியாக எடுத்துச்செல்லப்பட்டது.
தொடர்ந்து நேற்று காலை 6மணிக்கு திருப்பலியும், 7.30 மணிக்கு கூட்டுத்திருப்பலியும் அதனைத்தொடர்ந்து கொடியேற்றமும் நடந்தது. கொடியேற்ற விழாவிற்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன்அம்புரோஸ் தலைமை வகித்து கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன், மேயர் சசிகலாபுஷ்பா, ஆலய பங்குதந்தை வில்லியம் சந்தானம் மற்றும் பல்வேறு ஆலயங்களை சேர்ந்த பங்குதந்தையர்கள், முக்கியபிரமுகர்கள், பொதுமக்கள், பங்குமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 
பின்னர் மதியம் பேராயர் ஆன்ட்ரூ டிரோஸ் அடிகளார் அன்னைக்கு பொன்மகுடம் அணிவித்தார். மாலை 5.30 மணிக்கு இளையோருக்கான திருப்பலி நடந்தது. திருவிழாவை தொடர்ந்து நாள்தோறும் பங்குஇறை மக்களுக்கான திருப்பலியும், இரவு செபமாலை, நற்கருணை ஆசீரும் நடக்கிறது. 
விழாவில் ஆகஸ்ட் 4ம் தேதி இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருப்பவனி நடக்கிறது. மறுநாள் 5ம் தேதி காலை 7.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன்அம்புரோஸ் தலைமையில் பெருவிழா கூட்டுத்திருப்பலியும், மதியம் 12மணிக்கு திருச்சி மறைமாவட்ட ஆயர் அந்தோணி டிவோட்டா தலைமையில் சிறப்பு நன்றி திருப்பலியும், மாலை 5.30 மணிக்கு பேராயர் பீட்டர் பர்ணான்டோ தலைமையில் ஆடம்பரத் திருப்பலியும் நடக்கிறது. தொடர்ந்து இரவு 7மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவப்பவனி நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை தூய பனிமய மாதா பேராலய பங்குத்தந்தை வில்லியம்சந்தானம், துணை பங்குத்தந்தை கிளைட்டன், களப்பணியாளர் பிளேவியன், பங்குபேரவையினர் மற்றும் பங்குஇறைமக்கள் செயது வருகின்றனர். திருவிழாவை முன்னிட்டு எஸ்.பி.,ராஜேந்திரன் உத்தரவின்பேரில் ஏ.எஸ்.பி., மகேஸ் தலைமையில் போலீசார் 24மணிநேரமும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி : தினபூமி 
Read More

Tuesday, July 17, 2012

பட்டணத்தில் 60 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

17/07/2012 :
வீரபாண்டியன்பட்டணம் பஞ்.,ல்
அனுமதியின்றி வழங்கிய 60 குடிநீர் இணைப்புகளை கலெக்டர் உத்தரவின் பேரில்
அதிகாரிகள் துண்டித்தனர்.
வீரபாண்டியன்பட்டணம் பஞ்.,குட்பட்ட பகுதிகளில் 60 குடிநீர் இணைப்புகள்
கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கலெக்டரின் அனுமதியின்றி
பஞ்.,மூலம் வழங்கப்பட்டது. இதுகுறித்து கலெக்டரிடம் புகார்
கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி
அலுவலர்கள் சம்பந்தப்பட்ட குடிநீர் இணைப்புகளை கண்டறியும் பணியில் கடந்த
வாரம் ஈடுபட்டனர். 
அதன் அடிப்படையில் சனிக்கிழமை திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்
லீமாரோஸ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரஞ்சித் ஆகியோர் திருச்செந்தூர்
தாலுகா காவல் நிலைய எஸ்.ஐ.,க்கள் சுப்புலெட்சுமி மற்றும் சத்தியபாமா
உட்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் பணியில்
ஈடுபட்டனர்.இந்நிலையில் குடிநீர் இணைப்புகளை துண்டிக்கக் கூடாது என
வீரபாண்டியன்பட்டணம் பஞ்.,தலைவர் மாலாதேவி, பஞ்.,யூனியன் உறுப்பினர்
ஆனந்த்ரொட்ரிகோ, காயல்பட்டணம் அரசு ஆஸ்பத்திரி மருந்தாளுநர் பொன்பாண்டியன்
ஆகியோர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டனர். அதற்கு கலெக்டர்
உத்தரவின் பேரிலே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள்
தெரிவித்தனர்.
Read More

Tuesday, June 12, 2012

சுயதொழில்-கடல்பாசி வளர்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!!

தூத்துக்குடி தருவைகுளத்தில் உள்ள மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் ஜூன் 22-ம் தேதி நடைபெற இருக்கும் கடல்பாசி வளர்ப்பு பயிற்சியில் பங்குபெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தூத்துக்குடி தருவைகுளம் கடல்சார் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மைய இயக்குநர் (பொறுப்பு) மு.வெங்கடசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் அங்கமாக விளங்கும் மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தில் ஜூன் 22-ம் தேதி கடல்பாசி வளர்ப்பு குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.இந்தப் பயிற்சியில் கடற்பாசி வளம், கடற்பாசிகளை வளர்ப்பதன் பயன்கள், வளர்ப்புக்கேற்ற கடற்பாசிகள், கடற்பாசி தரும் பொருள்கள், கடற்பாசி உணவுப் பண்டங்கள், கடற்பாசிகளின் பயன்கள், கடற்பாசி வளர்ப்பதற்கு உகந்த இடங்களைத் தேர்வு செய்யும் காரணிகள் குறித்த தொழில்நுட்ப வகுப்பு மற்றும் செயல்விளக்க பயிற்சிகள் அளிக்கப்படும்.சுயதொழில் செய்ய விரும்புவோர், படித்து வேலையில்லா பட்டதாரிகள், ஆண் மற்றும் பெண் சுய உதவிக்குழுக்கள். படிப்பறிவு இல்லாதோர் கூட இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம். பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஜூன் 21-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் 0461-2910336, 2340 576, 2340 554 என்ற தொலைபேசி எண்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.மேலும், இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், கடல்சார் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம், தருவைக்குளம், தூத்துக்குடி என்ற முகவரியில் நேரில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் கடல்பாசி பற்றிய விவரம் அறிய இங்கே க்ளிக் குங்கள் 
Read More

Tuesday, May 1, 2012

மடிக்கணனி- எச்சரிக்கை!

( NOTE BOOK ) மடிக்கணனிகளில் வை-பை மூலம் இணையத்தினை உபயோகிக்கும் போது ஆண்கள் அக்கணனிகளை தமது மடியில் வைத்து உபயோகிப்பதனை தவிர்க்குமாறு புதிய ஆய்வொன்று தெரிவித்துள்ளது.இவ்வாறு மடியில் வைத்து மடிக் கணனிகளைப் பாவிப்பதன் மூலம் மின்காந்த கதிர்வீச்சினால் ஆண்களின் விந்தணு பாதிக்கப்படுவதாக ஆய்வில் நிரூபணமாகியுள்ளது. 


இக் கதிர்வீச்சினால் விந்தணுவின் டி.என்.ஏ பாதிக்கப்படுவதுடன் அதன் வீரியமும் குறைவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. 


இதனால் ஆண்மை பாதிக்கப்படுவதாகவும் இது தொடர்பில் அதிக அக்கறை கொள்ளும்படியும் அவ் ஆராய்ச்சியில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 


மேலும் கையடக்கத்தொலைபேசி மற்றும் டெப்லட் ஊடாகவும் வை-பை உபயோகிக்கும் போதும் இது தொடர்பில் கவனமாக இருக்கும் படியும் ஆராய்ச்சியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 


இதன்போது 29 பேரின் விந்தணு மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. 


வை-பை இல்லாமல் மடிக்கணனியை உபயோகித்து பரிசோதனை செய்தபோது விந்தணுக்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லையெனவும், ஆனால் வை-பையை உபயோகித்தபோதே இப்பாதிப்பு மோசமாக இருந்ததாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


இதனைத் தவிர மடிக்கணனிகளின் வெப்பம் அதிகரிக்கும் போதும், வாகனங்களின் சூடான இருக்கைகளும் ஆண்களின் விந்தணுக்களை பாதிப்பதாக ஆய்வுகளில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளன. 


இதேவேளை மடிக் கணனிகளை அதிக நேரம் நமது கால்களின் மீது வைத்து உபயோகிப்பதன் மூலம், ஒருவித தோல் நோய்க்கு உள்ளாகும் சாத்தியக்கூறு அதிகம் உள்ளதாகக் கடந்த வருடத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Read More

Sunday, April 29, 2012

'எலுமிச்சை' சர்வ ரோக நிவாரணி!


எலுமிச்சை. இது உலகெங்கும் நிறைந்து காணப்படும் பழமாகும். குறைந்த விலையில் எல்லா சத்துக்களும் நிறைந்த பழங்களில் எலுமிச்சையும் ஒன்று.
மனிதர்களுக்கு ஏற்படும் பலவித நோய்களை குணமாக்கும் சர்வ ரோக நிவாரணியாக எலுமிச்சை திகழ்கிறது. எலுமிச்சையின் தாயகம் பாரதம்தான். முதன்முதலாக 1784-ல் கார்ஸ்வில் ஹெம்மீலி என்பவர் எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருப்பதைக் கண்டுபிடித்தார்.
மருத்துவர் ப்ளென்னின் (1875) ஆராய்ச்சியில் கெட்ட இரத்தத்தை தூய்மைப்படுத்தும் மருந்துகளில் எலுமிச்சையை விட சிறந்தது வேறு இல்லை என கண்டறிந்தார். உதாரணமாக இரண்டாவது உலகப் போரின்போது ஜெர்மனிய வீரர்களின் காயத்தில் இருந்து ஒழுகும் இரத்தத்தை உடனடியாக நிறுத்த எலுமிச்சையை உபயோகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்தியர்களை விட மேலை நாட்டினர் எலுமிச்சை பழத்தையும், அதன் விதை, தோல் அனைத்தையும் மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். இதிலிருந்து வாசனைப் பொருட்களும் தயாரிக்கின்றனர். இந்தியர்களின் வீடுகளில் எலுமிச்சை ஊறுகாய் இல்லாமல் இருக்காது.
கண்களைப் பறிக்கும் மஞ்சள் நிறத்தில் மங்களகரமாய் காட்சிதரும் எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது.
100 கிராம் எலுமிச்சை பழத்தில்,
நீர்ச்சத்து - 50 கிராம்
கொழுப்பு - 1.0 கிராம்
புரதம் - 1.4 கிராம்
மாவுப்பொருள் - 11.0 கிராம்
தாதுப்பொருள் - 0.8 கிராம்
நார்ச்சத்து - 1.2 கிராம்
சுண்ணாம்புச் சத்து - 0.80 மி.கி.
பாஸ்பரஸ் - 0.20 மி.கி.
இரும்புச் சத்து - 0.4 மி.கி.
கரோட்டின் - 12.மி.கி.
தையாமின் - 0.2 மி.கி.
நியாசின் - 0.1 மி.கி.
வைட்டமின் ஏ - 1.8 மி.கி.
வைட்டமின் பி - 1.5 மி.கி.
வைட்டமின் சி - 63.0 மி.கி

எலுமிச்சையின் பயன்கள்:
வயிறு பொருமலுக்கு:
சிலருக்கு கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன்போல காணப்படும். வாயுவும் சேர்த்துத் தொல்லைக் கொடுக்க ஆரம்பிக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து அதில் வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் மேற்கண்ட தொல்லைகள் நீங்கும்.
தாகத்தைத் தணிக்க:
தற்போது கோடைக்காலத்தின் ஆரம்பத்தில் இருக்கிறோம். கோடை வெயிலின் தாக்கத்தால் அடிக்கடி தாகம் ஏற்படும். சிலருக்கு எவ்வளவுதான் தண்ணீர் அருந்தினாலும் தாகம் குறையாமல் இருக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து இரண்டு கப் நீரில் சர்க்கரை சேர்த்து பருகினால் தாகம் தணியும்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு:
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரைக்கு பதிலாக உப்பு சேர்த்து அருந்தலாம்.
கல்லீரல் பலப்பட:
எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறெடுத்து, அதில் தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் பலப்படும்.
தலைவலி நீங்க:
ஒரு குவளை சூடான காபி அல்லது தேநீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி, அரைமூடியை பிழிந்து சாறு கலந்து அருந்தி வந்தால் தலைவலி குணமாகும். காலை, மாலை என இருவேளையும் அருந்த வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு அருந்தி வந்தால் தலைவலி நீங்கும்.
நீர்க் கடுப்பு நீங்க:
வெயில் காலம் என்பதால் நீர்க்கடுப்பு பிரச்சினை சிலருக்கு அவதியை ஏற்படுத்தும். இந்நிலை நீங்க எலுமிச்சம் பழச்சாறுடன் சிறிது உப்பு கலந்து ஒருவாரம் அருந்தி வந்தால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் நீங்கும். இரத்தக் கட்டுக்கு உடம்பில் எங்காவது அடிபட்டாலோ, வீங்கினாலோ ரத்தம் கட்டி இருக்கும். இந்தப் பகுதியை தொட்டாலே சிலருக்கு வலியெடுக்கும். இந்த ரத்தக்கட்டு நீங்க சுத்தமான இரும்புக் கரண்டியில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து அதில் சிறிதளவு கரிய போளத்தைப் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) போட்டு காய்ச்ச குழம்பு போல வரும். அதனை எடுத்து பொறுக்கும் அளவு சூட்டுடன் இரத்தக்கட்டு உள்ள பகுதிகளில் பற்று போட வேண்டும். இவ்வாறு காலை, மாலை இரு வேளையும் சுத்தம் செய்து பற்று போட்டு வந்தால் ரத்தக்கட்டு குணமாகும்.
பித்தம் குறைய:
எலுமிச்சம் பழத்தை பிழிந்த சாற்றில் ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தையும், அதே அளவு மிளகையும் கொஞ்சம் கலந்து வெயிலில் காயவைத்து காய்ந்தபின் நன்றாக பொடித்து எடுத்து பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். காலை மாலை இருவேளையும் இதில் அரை தேக்கரண்டி அளவு வாயிலிட்டு வெந்நீர் குடித்து வந்தால் பித்தம் குறையும்.
எலுமிச்சை தோல்:
எலுமிச்சை பழத்தின் தோல், தோல் சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கி சருமத்திற்கு பளபளப்பைத் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எலுமிச்சம் பழத்தோலில் அதிக சக்தி கொண்ட எண்ணெய் இருப்பதை அறிந்தனர். இது பலவகையான நறுமணத் தைலங்கள் செய்வதற்கும் உபயோகமாகிறது. மேலும் வாதம், எரிச்சல், தொண்டைப்புண் போன்றவற்றிற்கு நல்லது. நகச் சுற்று கொண்டவர்கள் எலுமிச்சம் பழத்தை விரலில் சொருகி வைத்தால் நகச்சுற்று குணமாகும். கிராமப் புறங்களில் இன்றும் இம்மருத்துவ முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
எலுமிச்சம் பழத்தோலை உரித்தவுடன் அதன் மேல் வெள்ளையாக இருக்கும் சிறு தோலில் வைட்டமின் பி அதிகமாக உள்ளது.
* எலுமிச்சம் பழம், உடலில் களைப்பைப் போக்கி உடலுக்கு புத்துணர்வை உண்டாக்கும்.
* எலுமிச்சம் பழச்சாற்றை உடலில் தேய்த்து குளித்தால் உடல் வறட்சி நீங்கும்.
* தாதுவைக் கெட்டிப்படுத்தும்.
* உடல் நமைச்சலைப் போக்கும்
* மாதவிலக்கின் போது உண்டாகும் வலியைக் குறைக்கும்.
* மூலத்திற்கு சிறந்த மருந்தாகும். எலுமிச்சம் பழத்தின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். இதன் மருத்துவப் பயனை உணர்ந்து ஆரோக்கியம் பெறுங்கள்.
Read More

கோடையை விரட்ட - சில யோசனைகள்

கோடை காலத்தில் வியர்வை நாற்றம் வராமல் தவிர்க்க குளிக்கும் நீரில் சிறிது யூடிகோலோன் அல்லது பன்னீர் சேர்த்துக் கொள்ளலாம். வியர்வை நாற்றம் வருகிறதே என்று அளவுக்கு அதிகமாக பவுடர் உபயோகிப்பது நல்லதல்ல. கோடையில் எவ்வளவுக்கு எவ்வளவு பவுடர் உபயோகிப்பதைக் குறைக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. கோடையில் அதிகம் வியர்ப்பதால் பவுடர் போடும் போது சரும துவாரங்களில் பவுடர் அடைத்துக் கொள்வதுடன் வியர்வை அழுக்குகள்
Read More

Friday, April 13, 2012

விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க நாளை முதல் தடை

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.தமிழ்நாட்டில் மீன்களின் இனப்பெருக்க காலம் ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் ஆகும். ஆகையால் இந்த நாட்களில் அதிக அளவில் மீன் பிடிப்பதால் மீன் வளம் குறைந்து வந்தது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு கடற்கரை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலமான
Read More

உப்பு ரொம்ப தப்பு

சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், சர்க்கரை என்பதே வெள்ளை நஞ்சாக கருதப்பட்டு வருகிறது. ஆனால் மற்றொரு வெள்ளை அபாயம் இருப்பது நம்மில் பலருக்குத் தெரியாது அது – உப்பு.

எவ்வளவு ருசியாகச் சமைத்தாலும் உப்பில்லாவிட்டால் அதை வாயில் வைக்க முடியாது
Read More

Wednesday, March 28, 2012

ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டியில் ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ் பணியிடங்கள்




ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். எலெக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிக்கேஷன்,  இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஆகிய துறைகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளைநிலைப் பட்டம் அல்லது இயற்பியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் எம்.எஸ்சி. பட்டம் பெற்றிருக்க வேண்டும். 27 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.03.2012
விவரங்களுக்கு: www.aai.aero 

நன்றி : புதிய தலைமுறை 
Read More

டி.ஆர்.டி.ஓ. நிறுவனத்தில் டெக்னீஷியன் பணியிடங்கள்



டிபன்ஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் ஆர்கனைசேஷன் (DRDO) நிறுவனத்தில் டெக்னீஷியன் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கார்ப்பெண்டர், சி.என்.சி ஆபரேட்டர், டிராஃப்ட்ஸ்மேன்,  எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ்,  ஃபிட்டர், மெஷினிஸ்ட்,  மோட்டார் மெக்கானிக், டீசல் மெக்கானிக் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 28 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.04.2012
விவரங்களுக்கு: http://drdo.gov.in
நன்றி : புதிய தலைமுறை.
Read More

ரூ. 2 ஆயிரம் கட்டணத்தில் எம்பிபிஎஸ்


புகழ்பெற்ற எய்ம்ஸ் கல்வி நிறுவனம் தில்லியில் இயங்கி வருகிறது. இந்த ஆண்டில் மேலும் 6  இடங்களில் இந்தக் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன. இந்தக் கல்வி நிறுவனங்களில் எம்பிபிஎஸ் படிப்புக்குக் கட்டணம் ரூ. 2 ஆயிரத்துக்கும் குறைவு.


தெற்கு ஆசியாவிலேயே மருத்துவக் கல்வியிலும் மருத்துவ ஆராய்ச்சியிலும் தலை சிறந்த மருத்துவக் கல்வி நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்பது அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கனவு. நேருவின் முன் முயற்சியால் அன்றைய மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ராஜ்குமாரி அம்ரித் கௌர் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக எய்ம்ஸ் என்று அழைக்கப்படும் ஆல் இந்தியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் 1956 ஆம் ஆண்டில் உருவானது. இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. போபால், புவனேஸ்வரம், ஜோத்பூர், பாட்னா, ராய்ப்பூர், ரிஷிகேஷ் ஆகிய ஆறு இடங்களில் புதிதாக அகில இந்திய மருத்துவக் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன. இந்த ஏழு கல்வி நிறுவனங்களிலும் எம்பிபிஎஸ் படிப்பில் உள்ள இடங்களுக்கு மாணவர்களைச் சேர்க்க அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

தில்லியில் உள்ள எய்ம்ஸ் நிறுவனத்தில் எம்பிபிஎஸ் படிப்பில் 77 இடங்கள் உள்ளன. தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு 11 இடங்களும் பழங்குடி இன மாணவர்களுக்கு 5 இடங்களும் ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு 19 இடங்களும் ஒதுக்கீடு செயப்பட்டுள்ளன. மத்திய அரசினால் பரிந்துரைக்கப்படும் 5 வெளிநாட்டவர்களுக்கும் இங்கு இடங்கள் அளிக்கப்படும். இந்திய பிரஜைகளில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு உண்டு. புதிதாகத் தொடங்கப்படும் ஆறு எய்ம்ஸ் நிறுவனங்களில் தலா 50 மாணவர்கள் வீதம் சேர்க்கப்படுவார்கள். தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 15 சதவீத இடங்களும் பழங்குடியினருக்கு 7.5 சதவீத இடங்களும் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடங்களும் ஒதுக்கீடு செய்யப்படும். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு உண்டு. இங்குள்ள எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கப்படும் மாணவர்கள் ஓராண்டு இன்டர்ன்ஷிப் உள்பட மொத்தம் ஐந்தரை ஆண்டு காலம் படிக்க வேண்டும்.

இந்தப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் 17 வயதானவர்களாக (டிசம்பர் 31ம் தேதி அன்று) இருக்கவேண்டும். ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்து இருக்கவேண்டும். பிளஸ் டூ தேர்வில் பொதுப்பிரிவு மற்றும் ஓபிசி மாணவர்கள் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தற்போது பிளஸ் டூ தேர்வு எழுதும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கு முன் எய்ம்ஸ் நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்கள் கடைசியாக அத்தேர்வை எழுதிய ஆண்டைக் குறிப்பிட வேண்டும். எம்ஸ் கல்வி நிறுவனங்களில் எந்தக் கல்வி நிறுவனங்களில் சேர விரும்புகிறோம் என்பதையும் விண்ணப்பத்தில் வரிசைப் படுத்திக் குறிப்பிட வேண்டும்.

அகமதாபாத், பெங்களூரு, போபால், புவனேஸ்வரம், சண்டீகர், சென்னை, டேராடூன், தில்லி, குவாஹாத்தி, ஹைதராபாத், ஜம்மு, ஜோத்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, பாட்னா, ராய்ப்பூர் ஆகிய ஊர்களில் இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம். இந்த நுழைவுத் தேர்வு மூன்றரை மணி நேரம் நடைபெறும். ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் அப்ஜெக்ட்டிவ் முறையில்  கேள்விகள் கேட்கப்படும். இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடப்பிரிவுகளில் தலா 60 கேள்விகளும், பொது அறிவுப் பாடத்தில் 20 கேள்விகளும் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். கேள்விகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் எது சரியானது என்பதைத் தேர்வு செய்து விடையளிக்க வேண்டும். தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. பிளஸ் டூ பாடத்திட்ட நிலையில் வினாக்கள் கேட்கப்படும். இந்த நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டம் என எதையும் எய்ம்ஸ் வெளியிடவில்லை. வினாத்தாள்கள் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் இருக்கும். எந்த மொழியில் வினாத்தாள் வேண்டும் என்பதை மாணவர்கள் விண்ணப்பத்திலேயே குறிப்பிட வேண்டும். விண்ணப்பத்தில் குறிப்பிட்ட பிறகு, அதை மாற்ற முடியாது.

இந்தக் கல்வி நிறுவனங்களில் எம்பிபிஸ் அட்மிஷன் பெற, பொதுப் பிரிவு மாணவர்கள் இந்த தேர்வில் குறைந்தது 50 சதவீத கட் ஆஃப் மதிப்பெண்களைப் பெற வேண்டும். ஓபிசி பிரிவு மாணவர்கள் குறைந்தது 45 சதவீத கட் ஆஃப் மதிப்பெண்களைப் பெற வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் குறைந்தது 40 சதவீத கட் ஆஃப் மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்று எய்ம்ஸ் நிர்ணயித்துள்ளது.

இந்தக் கல்வி நிறுவனங்களில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு கட்டணமாக ரூ.1628 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சோதனைக்குப் பிறகு தேர்வு செயப்பட்ட மாணவர்கள் இந்தக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். விடுதிக் கட்டணமாக ரூ.4,228 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை மாற்றத்துக்கு உட்பட்டது. மத்திய அரசுக் கல்வி நிறுவனம் என்பதால் எம்பிபிஎஸ் படிப்புக்கு இந்த அளவு குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நுழைவுத் தேர்வு எழுத ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1,000. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்குக் கட்டணம் ரூ.800. பாரத ஸ்டே வங்கிகளில் கம்ப்யூட்டர் சலான் மூலம் இந்தக் கட்டணத்தைச் செலுத்தலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசித் தேதி 2-4-2012
நுழைவுத் தேர்வு 1-6-2012
விவரங்களுக்குwww.aiims.ac.inwww.aiims.edu, www.aiimsexams.org


நன்றி : புதிய தலைமுறை 
Read More

Saturday, March 24, 2012

இடிந்தகரை பகுதி பொதுமக்களுக்கு 25 டன் அரிசி, உணவு பொருட்கள் வழங்கல்!

இடிந்தகரை பகுதி பொதுமக்களுக்கு கடலோர மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் 25 டன் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.கூடன்குளம் அனுமின் நிலைய பிரச்சனையில் இடிந்தகரை பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த பகுதிகளில் இருந்து அவர்கள் வெளியேறவும் புதிய நபர்கள் உள்ளே செல்லமுடியாத வகையிலும் அங்குள்ள முக்கிய வழிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளன.இதனால் அங்குள்ள பொதுமக்கள் பால், மருந்து. உணவு பொருட்கள் போன்றவை கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இதற்காக தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் இருந்து 25 டன் அரிசி மற்றும் காய்கறிகள், மருந்து பொருட்கள், மளிகைபொருட்கள் போன்றவை அனுப்பபட்டன. இவை அனைத்தும் தூத்துக்குடி மாதா ஆலயத்தில் இருந்து லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.இந்நிகழ்ச்சிக்கு வீராங்கணை அமைப்பு இயக்குநர் பாத்திமாபாபு தலைமை வகித்தார். கிறிஸ்தவ மறுமலர்ச்சி இயக்கம் சுபாஷ் பர்னாந்து, பெரியார் திராவிடர் கழகம் பால் பிரபாகரன், நாட்டுப்படகு மீனவர் சங்கம் தலைவர் ராபர்ட், விசைப்படகு தொழிலாளர்கள் சங்கம் தலைவர் பார்த்திபன், நாம் தமிழர் இயக்கம் ஜெயசீலன், உடலுழைப்பு தொழிலாளர் சங்கம் கிருஷ்ணமூர்த்தி, வக்கீல் தமிழரசன், புரட்சிகர இளைஞர் முண்ணனி சுஜித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News Source : Tutyonline.net
Read More

Saturday, January 28, 2012

திருச்செந்தூரில் விபத்துகளை தவிர்க்க வேகத்தடை அமைக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்


திருச்செந்தூர், : திருச்செந்தூரில் விபத்து களை தவிர்க்க வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்செந்தூர் அரசு மருத்துவமனை அருகே திருநெல்வேலி சாலை சந்திக் கும் இடத்தில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. திருநெல்வேலி சாலையிலிருந்து திருச்செந்தூருக் குள் நுழையும்  வாகனங்கள் அரசு மருத்துவமனை சந்திப்பில் இடது மற்றும் வலது புறங்களில் வேகமாகத் திரும்புவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் திருநெல்வேலி சாலையிலிருந்து பழைய பஸ் நிலையத்திற்கு திரும்பும் பஸ்கள்  அதி வேகமாக இடதுபுறம் திரும்புவதால் ஆர்ச் பகுதியிலிருந்து பழைய பஸ் நிலையம் செல்லும் மற்றும் வடக்கேயிருந்து தெற்கு நோக்கி வரும் வாகனங்கள், நடந்து செல்வோர் நிலைகுலைகின்றனர்.
இதேபோல் திருச்செந் தூர் தெப்பக்குளம் சந்திப்பு பகுதியிலும் பரமன்குறிச்சி மற்றும் குலசேகரன்பட்டினம் சாலைகளில் இருந்து வரும் வாகனங்கள் வேக மாக வந்து நகருக்குள் நுழை வதால் அங்கும் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்கின்றன. எனவே அரசு மருத்துவ மனை மற்றும் தெப்பக்குளம் சந்திப்புகளில் வேகத்தடைகள் அமைத்தால் விபத்துகளை தவிர்க்கலாம் என பொதுமக்கள் கருதுகின்றனர். எனவே திருச்செந்தூரில் அரசு மருத்துவமனை சந்திப்பு பகுதியில் உள்ள திருநெல்வேலி சாலை யிலும், தெப்பக்குளம் சந்திப்பில் பரமன்குறிச்சி மற்றும் குலசேகரன்பட்டினம் செல்லும் சாலைகளிலும் வேகத்தடைகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Read More

Sunday, January 22, 2012

தமிழகத்திற்கு 1000 மெகாவாட் மின்சாரம் தரவேண்டும்: கூடங்குளம் உதயகுமார் வலியுறுத்தல்

தமிழக அரசு கேட்டுக் கொண்டபடி 1000 மெகாவாட் மின்சாரத்தை மத்திய அரசு உடனடியாக தரவேண்டும் என்று கூடங்குளம் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.கூடங்குளம் அணுஉலையை மூடக்கோரி தூத்துக்குடி மாவட்ட அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் திருச்செந்தூர் தேரடி திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.கூடங்குளம் அணுஉலையை மூடக்கோரி தூத்துக்குடி மாவட்ட அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் திருச்செந்தூர் தேரடி திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமை வகித்தார்.
அமலிநகர் பங்குதந்தை டிக்சன் வரவேற்றார். அடைக்கலாபுரம் அறநிலை அறக்கட்டளை இயக்குனர் செல்வராஜ், பாஜ நிர்வாகி ராஜலிங்கம், மாவட்ட நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் மணவை கயஸ், விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர் தமிழினியன், விவசாயசங்கம் அருள்தாஸ், ஆலந்தலை ரமேஷ், அமலிநகர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் பேசினர்.
பின்னர் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுக் கொண்டபடி 1000 மெகாவாட் மின்சாரத்தை உடனடியாக தரவேண்டும். மாற்று மின் திட்டங்களுக்கு தமிழக அரசு கோரியிருக்கும் நிதி உதவியை மத்திய அரசு வழங்க வேண்டும்.மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழகத்தை சேர்ந்த அமைச்சர்கள் இந்த கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும். 160 நாட்களுக்கு மேல் போராட்டம் நடந்தும் கூடங்குளம் பகுதி மக்களை மத்திய அமைச்சர் நாராயணசாமி மதிக்காமலும், அயல்நாட்டு பணம் வருகிறது எனவும் கொச்சைப்படுத்தி பேசி வருகிறார் என்றார்.இதில் அமலிநகர், ஆலந்தலை, மணப்பாடு, கூடுதாழை, கூட்டப்பனை, சாயர்புரம் சுப்பிரமணியபுரம், கொம்புத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர்.
Read More

தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)

PattanamPortal. Powered by Blogger.

Back To Top