தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)

Thursday, December 29, 2011

தொப்பை குறைய........ என்னன்ன சாப்பிடலாம்?


இஞ்சி சாறு தேன் கலந்து தினமும் சாப்பிட தொப்பை குறையும்.

அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அன்னாசியுடன் சேர்த்துக் கிளற வேண்டும். பின் ஒரு டம்ளர் நீர் ஊற்றி இரவிலேயே கொதிக்க வைத்து இறக்கி மூடி வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கிவிட்டு சாரை வெரும் வயிற்றில் அருந்த வேண்டும். தொடர்ந்து பத்து நாட்கள் மட்டும் இதை அருந்தினால் தொந்தி கரைந்துவிடும். இதோடு யோகா, உடற்பயிற்சி, அளவான சாப்பாடு இவற்றையும் தொடர வேண்டும்
Read More

Sunday, September 25, 2011

செந்தூர் எக்ஸ்பிரஸ் 27ம் தேதி முதல் தினந்தோறும் இயக்கப்படும்: டி.ஆர்.பாலு தகவல்

திருச்செந்தூர்- சென்னை இடையே ஓடும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் இயக்கப்படும் என்று டி.ஆர்.பாலு எம்.பி. கூறினார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை- திருச்செந்தூர் இடையே வாரம் இருமுறை இயங்கி வரும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை தினமும் விடக் கோரி
Read More

Wednesday, July 27, 2011

பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக துவங்கியது. வருகிற 5ம் தேதி தேர்பவனி நடைபெறுகிறது.தூத்துக்குடியில் புகழ்பெற்ற பனிமயமாதா ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஆகஸ்ட் 5ம் தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். இந்தாண்டிற்கான ஆலய திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 6.30 மணிக்கு மூன்றாம் திருப்பலி நடந்தது. அதைத் தொடர்ந்து காலை 7.30 மணிக்கு ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் கூட்டுத்திருப்பலியும் நடந்தது. பின்னர், கொடி கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கொடி கம்பத்திற்கு கொண்டு வரப்பட்டு. அங்கு கொடிக்கு ஆராதனைகள் செய்ய்பட்டது.பின்னர், கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. உலக சமாதானத்தை குறிக்கும் வகையில் வென் புறாக்களை பறக்கவிடப்பட்டன. பழைய துறைமுகத்திலிருந்து சைரேன் ஒலிகள் எழுப்பப்பட்டன. அங்கு கூடியிருந்த 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மரியே வாழ்க மரியே வாழ்க என்று விண்ணதிர கோஷமிட்டனர். பின்னர்,காணிக்கையாக கொண்டு வந்த பால், பழங்களை பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மறைமாவட்ட ஆயர் இவோன் ஆம்புரோஸ், பனிமய மாதா ஆலய பங்கு தந்தை வில்லியம் சந்தாணம், உதவி பங்கு தந்தைகள் உபர்ட்டஸ், இன்பேண்ட் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன், அதிமுக மாநகரச் செயலாளர் ஏசாதுரை உட்பட பலர் கலந்துகொண்டனர்.திருவிழாவிற்காக தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்து பக்தர்கள் தூத்துக்குடி வந்துள்ளனர். வெளியூர் பயணிகளுக்கு தங்க இடவசதி இரண்டு பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் பங்குதந்தை வில்லியம் சந்தானம், உபர்ட்டஸ், இன்பென்ட், மற்றும் அடைக்கல அன்னை அமலவை அருட்சகோதரிகள், பேராலய மேய்ப்பு பணிக்குழுவினர் மற்றும் பங்கு இறை மக்கள் செய்துவருகின்றனர்.பணிமயமாதா ஆலய திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்ட எஸ்பி நரேந்திரன் நாயர் உத்தரவின் படி, தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் சோனல் சந்திரா தலைமையில், இன்ஸ்பெக்டர் அன்னராஜ் முன்னிலையில், 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், வடபாகம் இன்ஸ்பெக்டர் வீமராஜ் தலைமையில் 8 தனிப்படை போலீசார் சிறப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஆலயத்தைச் சுற்றி 10க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
Read More

மீனவர்களை கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்!!!

 தூத்துக்குடியில் மாதந்தோறும் மீனவர் குறைதீர்க்கும் நாளை உடனே தவறாமல் நடத்த வேண்டும் என கடலோர மக்கள் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.இது குறித்து கடலோர மக்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள கோரிக்கை மனு விபரம்; 
புதிய அரசு பொறுப்பேற்று மூன்று மாதங்கள் ஆகியும் தூத்துக்குடி மாவட்டத்தில் மாதந்தோறும் நடக்க வேண்டிய மீனவர் குறை தீர்க்கும் நாளை இது வரையிலும் நடத்தாமல் மாவட்ட நிர்வாகமும், மீன் வளத்துறையும் வேண்டுமென்றே சாக்கு போக்கு சொல்லி திட்டமிட்டே தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறது.
Read More

Friday, July 8, 2011

டிப்ளமோ படித்தவர்களுக்கு அபுதாபியில் வேலை

அபுதாபியில் உள்ள பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நடராஜன் வெளியிட்ட செய்தி குறிப்பு:அபுதாபியில் உள்ள ஒரு முன்னணி பைப் பிட்டிங் நிறுவனத்திற்கு பிளாஸ்டிக் தயாரிக்கும் நிறுவனத்தில் பிளாஸ்டிக் பைப் மற்றும் பிளாஸ்டிக் அடிடிவ் அல்லது மாஸ்டர் பேட்சஸ் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.45 வயதிற்கு மேற்பட்ட 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற லைன் (எக்ஸ்ட்ரூடர்) ஆபரேட்டர்கள், பட்டப்படிப்புடன் வேர்ஹவுஸ் பணியாளர்கள், ஸ்டோர் கீப்பர்கள் மற்றும் டிப்ளமோ பயின்று 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற சிப்ட் மேற்பார்வையாளர்கள் தேவைப்படுகின்றனர்.தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு கல்வி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ற வகையில் நல்ல ஊதியம், அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இதர சலுகைகள் வழங்கப்படும்.இந்த பணியிடங்களுக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் தட்டச்சு செய்யப்பட்ட சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் புகைப்படத்துடன் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், 48, முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை என்ற முகவரியில் 11ம் தேதி காலை 9 மணிக்கு நடக்கும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044 & 24464268, 24464269 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்
Read More

Sunday, June 26, 2011

கைப்பேசியில் இணையம் உபயோகிப்பவரா நீங்கள்? உங்களுக்காக சில...(Some useful tips for Mobile Internet users)

நம்மில் சில பேர் கைப்பேசி ( ௦௦  ) வழியாக
இன்டர்நெட்  பயன்படுத்துவதை பார்த்திருக்கிறோம்...
அவர்களுக்காக சில உபயோகமான தகவல்கள் இதோ..எனக்கு தெரிந்த வரையில்...





மொபைலில் எல்லா மொழிகளிலும் browse செய்ய

முதலில் உங்கள் மொபைல் போனில் GPRS Connection இருக்கவேண்டும்.  
இது இருந்தால் தான் இன்டர்நெட் மொபைல் வழியாக உபயோகப்படுத்த முடியும் என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

இப்போது உங்கள் மொபைலில், Opera mini browser,ஐ பதிவிறக்கி மொபைலில் இன்ஸ்டால் செய்ய  வேண்டும்.  இதோ இந்த சுட்டி யை கிளிக் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

 பிறகு opera mini browser'ஐ திறந்து அதனுடைய அட்ரெஸ்
பாரில் Opera:config என டைப் செய்து OK அழுத்தவும்.  பிறகு ஒரு மெனு உங்களுக்குத் தெரியும்.  அதில் கடைசியாக இருக்கும் Use bitmap fonts for complex scripts gvie என்ற இடத்தில் NO என்று இருக்கும்.  அதை நீங்கள் YES என்று மாற்றுங்கள் பிறகு saveசெய்து வெளியேறுங்கள்.  அதற்குப் பிறகு எல்லா மொழிகளிலும் இணையத்தில் தேடுதல் வேட்டை நடத்தலாம். முக்கியமாக நமது தாய் மொழி தமிழிலும்தான்



மொபைல் போனில் எல்லா மொழி செய்தி தாள்களையும் படிக்க 



முதலில் உங்கள் மொபைல் போனில் GPRS Connection மூலம் இன்டர்நெட் கனக்ட் செய்து .  பிறகு கீழே கொடுத்துள்ள தளத்திற்கு சென்று news hunt என்ற சாப்ட்வேரை டவுன்லோட் செய்து உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.  
இதில் அனைத்து மொழி
செய்தித்தாள்களையும் லைவாக படித்து தெரிந்துக் கொள்ளலாம்.   இந்த சாப்ட்வேர் முற்றிலும் இலவசமாக  கிடைக்கிறது.



மொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய
மேலே குறிப்பிட்டது போல செய்தித்தாள்களை உங்கள் மொபைலில் இருந்தே படிப்பது போல, தமிழிலேயே டைப் செய்யவும் வழி இருக்கிறது..
மொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய panini tamil என்ற இலவச சாப்ட்வேரைப் பயன்படுத்தலாம்.
இந்த சாப்ட்வேர் ஒரு சில மொபைல் போன்களுக்கு சப்போர்ட் செய்வதில்லை.  மேலும் இந்த தளத்திலேயே எந்த எந்த மொபைல்களுக்கு சப்போர்ட் செய்யும் என்ற விபரமும் கொடுக்கப்பட்டுள்ளது.  இதற்காக அந்த தளத்தில் உள்ள Compatible phones என்ற டேப் ஐ அழுத்தி காணலாம்.   முதலில் இந்த தளத்திற்கு சென்றவுடன் அதன் Header பகுதியில் உங்கள் போனுக்கான மாடலை செட் செய்து கொள்ளவும்.  பிறகு உங்கள் மொபைலுக்கான Panini Tamil ஐ டவுன்லோட் செய்து பயன்படுத்தவும்.





Read More

Saturday, May 21, 2011

எச்சரிக்கை! :- பேஸ்புக் பாவனையாளர் புகைப்படங்கள் பாலியல் தளங்களில்!

நான் சமீபத்தில் ஒரு தமிழ் குழு இணையத்தில் கண்ட செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்..இதோ அந்த செய்தி...


 நீங்கள் வலையில் மேய்ந்து கொண்டிருக்கும் போது பாலியல் டேட்டின் தளத்தில்
அல்லது அதன் விளம்பரத்தில் உங்களது புகைப்படத்தைப் பார்த்தால் எப்படி
இருக்கும். நீ என்ன லூசா ? என்று என்னைப் பார்த்து

Read More

Saturday, May 7, 2011

இணையதளத்தில் பதிவு செய்தால் பிளஸ் 2 ரிசல்ட்!

பொதுநூலக இயக்குநர் இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் செல்போன் நம்பரை பதிவு செய்துவைத்திருந்தால் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வரும் 9ம் தேதி காலை 7 மணிக்கு வீட்டில் இருந்தபடியே தெரிந்துகொள்ளலாம்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவர் பரிமளா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; தமிழ்நாடு முழுவதும் வரும் 9ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் பல்வேறு இணையதளங்களில்
Read More

Tuesday, May 3, 2011

கடற்கொள்ளையர்களின் பிடியில் புன்னக்காயலைச் சேர்ந்த கப்பல் மாலுமி


சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில், கடந்த எட்டு மாதமாக சிக்கித் தவிக்கும், தூத்துக்குடி மாவட்ட கப்பல் மாலுமியை மீட்க வலியுறுத்தி, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலைச் சேர்ந்த மீனவர் லிட்டன் மகன் டனிஸ்டன்(26), தனியார் கப்பலில் மாலுமியாக பணிபுரிகிறார். இந்த சரக்கு கப்பல் கடந்தாண்டு செப்.,28ம் தேதி, பிரான்சிலிருந்து வளைகுடா நாட்டிற்கு சென்ற போது, சோமாலிய கடற்பகுதியில், அந்நாட்டு கடற்கொள்ளையர்கள் இக்கப்பலை சிறைபிடித்து கடத்தினர். இதில் பணிபுரிந்த டனிஸ்டன் உள்ளிட்ட 15 மாலுமிகள், பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டனர்.
Read More

Thursday, April 28, 2011

கோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ்

கோடை வருவதற்கு முன்பே வெயில் வறுத்தெடுக்க ஆரம்பிச்சிருச்சு. கோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ் இங்கே.


காலை நேரங்களில் ஆப்பிள் ஜுஸ் சாப்பிட்டு வரலாம். நாள் முழுவதும் புத்துணர்வாக இருப்பதுடன் ஜீரண சக்தியும் அதிகரிக்கும். இது சருமத்தையும் மென்மையாக வைத்திருக்க உதவும்.

வியர்வை நாற்றத்தைப் போக்க தினமும் பூலாங்கிழங்கு, சந்தனம் தேய்த்துக் குளித்து வந்தால் நாள் முழுவதும் வாசனையாக இருக்கும்.

தினசரி ஒரு தக்காளி சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடம்பும் தளதள வென்று இருக்கும்.

பேரீச்சம் பழத்தை

Read More

Sunday, April 24, 2011

தமிழில் டைப் செய்ய எளிய வழி...


அனைவருக்கும் ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள்.....
இந்த பதிவில் எனக்கு தெரிந்த ஒரு சிறிய விஷயம் உங்களோட பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்..

நாம் உபயோகிக்கும் கம்ப்யூட்டரில் தமிழ் எழுத்துருக்கள்(Fonts) இருந்தாலும் அதில் நமக்கு டைப் செய்வது என்பது எளிதான காரியமல்ல. அல்லது நமக்கு தமிழ் விசைப்பலகை (Tamil Keyboard) இருந்தாலும் அதில் எழுத்துக்களை தேடி தேடி டைப் செய்வதற்குள் நமக்கும் வயசாகிடும்,கம்ப்யூட்டருக்கும் வயசாகி விடும். நம்மில் பலபேர் Facebook,Google Talk போன்ற தளங்களில் ஆங்கிலத்திலேயே தமிழை எழுதுவதை பார்த்திருக்கிறோம். அதாவது “எப்படி இருக்கு” என்று கேட்பதற்கு “Eppadi Irukku” என்பது போல...மேலும் சில பேருக்கு தமிழில் கவிதையோ,கதையோ,கருத்துக்களோ எழுதுவதில் நமக்கு ஏற்படும் உணர்வுகளை இது போன்று எழுதும்போதும்,படிக்கும்போதும் நமக்கே கொஞ்சம் கடுப்பாக இருக்கும்....இதற்கெல்லாம் ஒரு வரப்பிரசாதமாக Google ஒரு அருமையான வழியை ஏற்படுத்தி இருக்கிறது...அதை தான் இந்த பதிவில் உங்களுக்கு தெரிவிக்கலாம் என்று ஆசைப்படுகிறேன். இதைப்பற்றி நம்மில் சில பேருக்கு தெரிந்திருக்கலாம்...இருந்தாலும் இது இந்த வசதியை பற்றி தெரியாதவர்களுக்காக....

இதற்கு நீங்கள் முதலில் செய்யவேண்டியது
Read More

Monday, April 11, 2011

பயனுள்ள கத்தோலிக்க தளங்கள் - பதிவு-2


 முந்தைய பதிவில் குறிப்பிட்ட தளங்களை போலவே இன்னும் பல கத்தோலிக்க தளங்கள் தமிழில்,ஆங்கிலத்தில்  இணையத்தில் இருக்கின்றன. எனக்கு தெரிந்த வரையில் இதோ இன்னும் சில தளங்கள்....








தமிழ் கிறிஸ்டியன்


 இந்த தளத்தில் நவநாள் ஜெபங்கள்,புனிதர்களை பற்றிய வரலாறு, ஆலயங்களை பற்றிய தகவல்கள்,பாடல் வரிகள்,கட்டுரைகள் என பல விஷயங்கள் இருக்கின்றன.
Read More

Friday, March 25, 2011

பயனுள்ள கத்தோலிக்க தளங்கள் - பதிவு-1


வணக்கம்,
தவிர்க்க முடியாத காரணத்தினால் இப்போது நமதூர் செய்திகளை வழங்கமுடிவதில்லை.எனினும் இந்த தளத்திற்கு வருகை தந்து ஆதரவளிக்கும் அனைவருக்கும் எமது நன்றிகள்..
         அதிக வேலைப்பளுவிற்கு இடையிலும், தனது நேரத்தை ஒதுக்கி,www.pattanam.com  மூலம் நமதூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கி, உலகளவில் பரந்து நிற்கும் நமதூர் உறவுகளுக்காக ஒரு சிறப்பான சேவையை செய்து வரும்  நண்பர்.திரு.அமுதன் பீரிஸ் அவர்களுக்கு நமது நன்றிகளும்,பாராட்டுக்களும்.....அவரது இந்த சேவைப்பணி சிறக்க எங்கள் வாழ்த்துக்கள். 
எனது இந்த தளத்தை ஆரம்பித்ததன் நோக்கம் நமதூர் செய்திகளை நம் தாய்மொழியாம் தமிழிலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தினாலும்,எனக்குள்ள ஒரு ஆர்வத்தினை சரிவர பயன்படுத்தவும் தான்...தற்போது என்னால் செய்திகள் தான் சரிவர வழங்க முடிவதில்லை எனினும் சில பயனுள்ள தகவல்களை இந்த தளத்தின் மூலம் பகிர்ந்து கொண்டால் என்ன என்று யோசித்ததன் விளைவு தான் இந்த பதிவு....
              முதலில் இணையத்தில் மிக சிறப்பாக இறைப்பணி செய்யும் சில
Read More

Sunday, March 13, 2011

திருச்செந்தூர் தொகுதியில் சரத்குமார் போட்டி?

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் சரத்குமார் போட்டியிடுகிறார் என்ற பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 13ம் தேதி நடக்கிறது. தேர்தலையொட்டி அதிமுக, திமுக, தலைவர்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் மும்மரமாக உள்ளனர்.சமத்துவ மக்கள் கட்சி எந்த கட்சியுடன் கூட்டணி என்று பரபரப்பான நிலையில் பேசிக் கொண்டிருந்த நிலையில், நாடார் கூட்டமைப்புகள் ஒன்று பெருந்தலைவர் மக்கள் கட்சி என்று புதிய இயக்கத்தை ஆரம்பித்து, அதற்கு தலைவராக சரத்குமாரை நியமனம் செய்தனர்.சரத்குமார் தலைவராக நியமிக்கப்பட்ட சில மணி நேரத்தில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி 2 தொகுதியில் போட்டியிட சரத்குமார் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.  இதனால் நாடார் கூட்டமைப்பு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.சரத்குமார் அதிமுக கூட்டணியில் சேர்ந்ததற்கு பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் சரத்குமார் கூட்டணி வைக்க நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாம். இதில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சமத்துவ மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்படும். இதில் சரத்குமார் போட்டியிட வேண்டும் என்பதே முக்கிய நிபந்தனை என்று கூறப்படுகிறது.ஏனென்றால், அதிமுகவை விட்டு சென்ற அனிதா ராதாகிருஷ்ணன், திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தற்போது எம்.எல்.ஏ.ஆக உள்ளார். அவருக்கே மீண்டும் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட இருக்கிறதாம். இதனால் அனிதா ராதாகிருஷ்ணனை தோற்கடிக்கவே, சரத்குமாரை களம் இறக்கி உள்ளதாக கூறப்படுகிறது.நாடார்கள் அதிகமுள்ள திருச்செந்தூர் தொகுதியில் சரத்குமாரை நிறுத்தியும், எப்படியும் அனிதா ராதாகிருஷ்ணனை தோற்கடித்து விடலாம் என்று அதிமுக சார்பில் முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.மேலும் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொகுதியும் சமத்துவ மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு எர்ணாவூர் நாராயணன் அல்லது கரு.நாகராஜன் ஆகிய இருவரில் ஒருவரை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


News Source : Tutyonline
Read More

Sunday, February 27, 2011

திருச்செந்தூரில் மார்ச் 6ல் மெகா கோலப்போட்டி

                                  திருச்செந்தூரில் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் மார்ச் 6ம் தேதி மெகா கோலப்போட்டி நடக்கிறது. இதில் முதல் பரிசுக்கு 5பவுன் தங்கசெயின் பரிசு வழங்கப்படுகிறது. தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் 59வது பிறந்தநாளை முன்னிட்டு
Read More

தினந்தோறும் இனி செந்தூர் எக்ஸ்பிரஸ் ஓடும்


தமிழகத்தின் நிறைய ரயில்வே திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தாலும், இந்த பட்ஜெட்டில் சொற்ப அளவிலான சில விஷயங்கள் கிடைத்துள்ளது என்றே தெரிகிறது. ஒன்பது மின்சார ரயில்களும், ஒரு துரந்தோ ரயிலும், மதுரை - தூத்துக்குடி இடையில் புதிய ரயில் பாதைக்கான திட்டமும், சென்னை - தூத்துக்குடி இடையில் தினந்தோறும் ரயில் இயக்குவது உள்ளிட்ட விஷயங்கள் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.
Read More

Tuesday, February 1, 2011

பயின்றோர் கழக பொதுக்குழு கூட்டம் - அழைப்பிதழ்.


Read More

Saturday, January 29, 2011

அரசின் கல்வி உதவி


தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான 2010-2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகையை அறிவித்து உள்ளது .
இந்த கல்வி தொகை நிலைகளாக உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
Read More

Sunday, January 23, 2011

வீட்டு மருத்துவக் குறிப்புகள்:

01:செருப்புக்கடி புண்ணுக்கு
தென்னை மரக் குருத்தோலையை அல்லது குருத்தோம்பை (தென்னம்பூவு தோன்றிய பின் உருவாகும் சிறு சிறு காய்) நெருப்பில் சுட்டுக் கரியாக்கி தேங்காய் எண்ணெயில் குழப்பி புண்ணில் தடவி வர குணமாகும்.


02:மூட்டுவலி, மூட்டு வீக்கம் குணமாக
கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு. இம்மூன்றையும் சரிபங்கு எடுத்து நீர்விட்டு அரைத்து, சுடவைத்து பொறுக்கும் பக்குவத்தில் சிறிது கற்பூரம் கலந்து வலி உள்ள இடங்களில்
Read More

குழந்தைங்க....




குழந்தைங்கன்னாலே அதுங்க பண்ற சேட்டை, துடுக்குத்தனம்,எல்லாத்தையும் பார்த்துகிட்டே இருக்கலாம்..தம் மழலை மொழியால் பேசுறத கேட்டா இன்னும் சந்தோஷமா இருக்கும்..அப்படி சேட்டை பண்ற குழந்தைய
Read More

முதுகு வலிக்கு சில பயிற்சிகள்

 நம்மில் பல பேர் அலுவலகத்திலும்,வீடுகளிலும் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்கிறோம். மேலும் பல நேரங்களில் நீண்ட நேரம் வாகனம் ஓட்டுவதும் உண்டு.
ஆனால் அன்று இரவு படுக்கைக்கு போகும்போது தான் அந்த வலி தெரியும் ..
அந்த வலியை நாம் சாதாரணமாக நினைத்து உதாசீனப்படுத்த கூடாது.
அது மேலும் பல வலி,நோய்கள், இயலாமைக்கு வழி வகுத்து விடும்.
அதை சில பயிற்சிகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.
இதோ அந்த பயிற்சிகள் உங்களுக்காக...முயற்சி செய்து தான் பாருங்களேன்.

Read More

அ முதல் ஃ வரை இலவசமாய் இணையத்தில்


தமிழ் இலக்கண நூல்கள், காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நெறிநூல்கள், கவிதை-உரைநடை நூல்கள்,நாட்டுப்புற இலக்கியங்கள், சிறுவர் இலக்கியங்கள் என்று பல்வேறு பிரிவுகளில் சுமார் 400 புத்தகங்களை வாங்கினால்உங்களுக்கு எவ்வளவு செலவு ஆகும்? புத்தக அலமாரி தாங்குமா? சொந்தமாக வாங்க முடியவில்லை என்றாலும் நூலகத்துக்கு சென்று படித்தால், இவ்வளவற்றையும் படிக்க எவ்வளவு காலம் ஆகும்?

கவலையே வேண்டாம். இத்தனையும் உங்களுக்கு இலவசம். உங்கள் புத்தக அலமாரியில் இவற்றுக்கு இடஒதுக்கீடும்வேண்டாம். நூலகத்துக்கு பாதம் தேய நடக்கவும் வேண்டாம். உட்கார்ந்த இடத்திலிருந்தே உங்கள் கணினியில் இணைய இணைப்பை சொடுக்கினால் போதும். அத்தனையும் உங்கள் மவுஸின் கட்டுப்பாட்டில்.

அதிசயமாக இருக்கிறதா? தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின்நூலகத்தை இணையத்தில் திறந்தோமானால் இன்னும் நிறைய ஆச்சரியங்கள் காத்துக் கிடக்கின்றன. இந்நூலகம் மொத்தம் பல்வேறு செயல்பாடுகளை கொண்டு தனித்துவத்தோடு இயங்கி வருகிறது.

தமிழ் இலக்கண நூல்களில் தொல்காப்பியத்தில் தொடங்கி புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கலம் என்று அறுவகை இலக்கணம் வரை தமிழின் ஆதார இலக்கணநூல்கள் 20 தொகுக்கப்பட்டிருக்கின்றன. சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டு,எட்டுத்தொகை, பாட்டும் தொகையும் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன. திருக்குறள், நாலடியார் தொடங்கி அத்தனை பதிணென்கீழ்க்கணக்கு நூல்களும் நூலகத்தில் உண்டு.

சிலப்பதிகாரத்தில் தொடங்கி தமிழின் முக்கிய காப்பியங்கள் அனைத்தும் இணையத்தில் ஏற்றப்பட்டிருக்கிறது. இவை மட்டுமன்றி சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நெறிநூல்கள், சித்தர்பாடல்கள் என்று திகட்ட திகட்ட தமிழமுதம் வாரி வாரி வழங்கப்படுகிறது.

சங்க இலக்கியங்கள் ரோமன் வரிவடிவத்திலும் தனியாக வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு அகராதிகள் தளத்தில் உண்டு. தமிழ் கலைக்களஞ்சியம் (என்சைக்ளோபீடியா) பத்து தொகுதிகள் கிடைக்கிறது. பல்வேறு துறைகளிலும் புழக்கத்தில் இருக்கும் புதிய கலைச்சொற்களை தொகுத்து கொடுக்கிறார்கள். தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்கள் தொகுத்த சுவடிகளை, சுவடிக் காட்சியகமாக கண்முண்ணே விரிகிறது. சுவடிகளை இணையத்தில் விளக்கங்களோடு வாசிக்கலாம்.

இவை மட்டுமல்லாது, பண்பாட்டுக் காட்சியகம் ஒன்றும் சிறப்பாக இங்கே இயங்குகிறது. இதில் திருத்தலங்கள், திருவிழாக்கள்,கலைகள், வரலாற்றுச் சின்னங்கள், விளையாட்டுகள் என்று தமிழருக்கான பாரம்பரியப் பெருமைகள் அனைத்துமே ஒலி-ஒளிகாட்சிகளாக சேகரிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் குறித்தோ அல்லது தமிழர் குறித்தோ மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிகள் செய்ய விரும்புபவர்களுக்கு தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின்நூலகம், போதும் போதுமென்று சொல்லக்கூடிய அளவுக்கு தகவல்களை அள்ளி வழங்குகிறது.

ஒருமுறை இந்நூலகத்துக்குள் நுழைந்துவிட்டால் தமிழ் நம்மை ஈர்த்து இங்கேயே உட்கார வைத்துவிடும். இந்நூலகத்தில் இருக்கும் நூல்களை ஒருங்குறியில் (Unicode) மாற்றிவரும் பணிகள் நடந்துவருவதால், சில நூல்களை வாசிக்க எழுத்துருதேவைப்படும். எனவே முதன்முதலாக நூலகத்துக்குள் நுழையும்போது, தேவைப்படும் எழுத்துருவை உங்கள் கணினியில் நிறுவிவிடுவது நல்லது.

இதுவரை ஏறக்குறைய இரண்டு லட்சம் வருகைகளை பெற்றுள்ள இந்த நூலகத்துக்கு நீங்களும்தான் போய்ப் பாருங்களேன்.

இணைய முகவரி : http://www.tamilvu.org/library/libindex.htm
(நன்றி : புதிய தலைமுறை)
Read More

தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)

PattanamPortal. Powered by Blogger.

Back To Top