தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில்திறன் படைத்தவர்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது, என் மாவட்ட ஆட்சியர் சி.என்.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில்திறன் படைத்தவர்கள், தொழிற்பயிற்சி முடித்து வேலை இல்லாமல் இருப்பவர்கள் மற்றும் படித்து வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்திறன் படைத்த இளைஞர்களை ஒருங்கிணைத்து, அடுத்த மாதம் 11-ந் தேதி தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
அதற்கு முன்னோடியாக, வேலைக்கு ஏற்ற தொழில் நிறுவனங்களை தேர்வு செய்வதற்கு ஏதுவாக, வருகிற 22, 23-ந் தேதிகளில் தொழில் திறன் படைத்த, படித்த இளைஞர்கள் தங்களது கல்வித்தகுதி, வயது, விரும்பும் பணியிடம் போன்ற விவரங்களை அளிக்க வேண்டும். இதற்காக கல்விச்சான்று மற்றும் இதர சான்றுகளின் நகல்களுடன், சுயவிவர குறிப்புடன் நேரில் ஆஜராகி பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் பங்கேற்று தகுதியான தொழில்திறன் படைத்தவர்களை தங்களது நிறுவனத்துக்கு தேர்வு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தொழில் நிறவனங்கள் தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களின் கல்வித்தகுதி, அனுபவம் போன்ற விவரங்களை வருகிற 26ம் தேதிக்குள் தூத்துக்குடி மாவட்ட தொழில் மையத்தில் நேரிலோ, தபால் மூலமாகவோ அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதுதொடர்பாக மேலும் தகவல் அறிய விரும்புவோர் 0461-2340152, 2340053 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் சி.என்.மகேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.