தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)

Friday, July 8, 2011

டிப்ளமோ படித்தவர்களுக்கு அபுதாபியில் வேலை

அபுதாபியில் உள்ள பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நடராஜன் வெளியிட்ட செய்தி குறிப்பு:அபுதாபியில் உள்ள ஒரு முன்னணி பைப் பிட்டிங் நிறுவனத்திற்கு பிளாஸ்டிக் தயாரிக்கும் நிறுவனத்தில் பிளாஸ்டிக் பைப் மற்றும் பிளாஸ்டிக் அடிடிவ் அல்லது மாஸ்டர் பேட்சஸ் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.45 வயதிற்கு மேற்பட்ட 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற லைன் (எக்ஸ்ட்ரூடர்) ஆபரேட்டர்கள், பட்டப்படிப்புடன் வேர்ஹவுஸ் பணியாளர்கள், ஸ்டோர் கீப்பர்கள் மற்றும் டிப்ளமோ பயின்று 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற சிப்ட் மேற்பார்வையாளர்கள் தேவைப்படுகின்றனர்.தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு கல்வி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ற வகையில் நல்ல ஊதியம், அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இதர சலுகைகள் வழங்கப்படும்.இந்த பணியிடங்களுக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் தட்டச்சு செய்யப்பட்ட சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் புகைப்படத்துடன் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், 48, முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை என்ற முகவரியில் 11ம் தேதி காலை 9 மணிக்கு நடக்கும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044 & 24464268, 24464269 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்

0 comments

Post a Comment

தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)

PattanamPortal. Powered by Blogger.

Back To Top