தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)

Saturday, August 21, 2010

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சி


மகளிர் திட்டம் மூலமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும் 25ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பம் செய்யுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழக அரசின் சீரிய முயற்சியால் வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழிற்சாலைகள் அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இதனால் ஏராளமான தொழில் வாய்ப்புகளும் உருவாகி உள்ளது. படித்த இளைஞர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும். தொழிற்பயிற்சி பெற்ற அனைத்து இளைஞர்களுக்கும் தமிழகத்தில் அயல்நாடுகளிலும் வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன.
படித்த இளைஞர்களுக்கு இலவசமாக தொழிற்பயிற்சி அளிக்க அரசு முடிவு செய்து அதற்காக முதல்கட்டமாக 2006ம் ஆண்டு முதல் மகளிர் திட்டம் மூலமாக இலவச தொழிற்பயிற்சி இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.2010-2011ம் ஆண்டிற்கு ஏழ்மை நிலையில் உள்ள கிராமம் மற்றும் நகர்புறத்தில் வசிக்கும் 200 இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜெ.சி.பி இயக்குதல் மற்றும் பராமரித்தல் இரண்டு மாதப் பயிற்சி, ஹெவிகிரேன் இயக்குதல் மற்றும் பராமரித்தல் 2 மாத பயிற்சி, போர்க் லிப்ட் இயக்குதல் மற்றும் பராமரித்தல் இரண்டு மாத பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி (எம்எஸ் ஆபிஸ், டிசிஏ அன்ட் டேலி) 3 மற்றும் 4 மாத பயிற்சி, மருந்தாய்வக தொழில்நுட்ப வல்லுநர் 6 மாத பயிற்சி. இந்த பயிற்சிக்கு தகுதியுள்ள இளைஞர்கள், இளம் பெண்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். குறைந்தது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது 18 முதல் 35 வரை இருக்க வேண்டும். ஊரக மற்றும் நகர்புற சுய உதவிக்குழுவில் உறுப்பினராக இருப்பவரும், உறுப்பினராக இருப்பவரின் வாரிசுகளும், குழு உறுப்பினர்களாக இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக் காலத்தில் நாள் ஒன்றுக்கு 25 ரூபாய் வீதம் உதவித் தொகை வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் ஆபிஸ் வளாகத்தில் உள்ள மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தில் அலுவலக வேலை நேரத்தில் மட்டும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 25ம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும் அளவிற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இச்செய்தியை வெளியிட உதவிய திரு.தர்மர் ரோட்ரிகோ அவர்களுக்கு எங்களது நன்றியையும் பாராட்டையும்  தெரிவித்துகொள்கிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள Link-ன் செய்தியை தான் இங்கும்  எழுதியிருக்கிறோம். 




0 comments

Post a Comment

தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)

PattanamPortal. Powered by Blogger.

Back To Top