தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)

Sunday, June 27, 2010

புனித ஞானபிரகாசியார் சபை திருவிழா

 
நமதூர் பங்கிலுள்ள இளைஞர்களின் சபையான புனித ஞானபிரகாசியார் சபையின் 
ஆண்டு விழா நேற்று (27-6-10/ஞாயிற்றுகிழமை) மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பங்குதந்தையர்கள் அருட்திரு ஜோசப் அடிகளார்,அருட்திரு.ராஜன் அடிகளார்,திருவிழா சிறப்பு திருப்பலியை நிறைவேற்ற,
சபையின் நிர்வாகிகளும்,உறுப்பினர்களும்,பங்குமக்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
2009-10 ஆண்டின்
சபை நிர்வாகிகள்


பின்னர் மாலையில் திவ்ய நற்கருணை ஆராதனையுடன்,சபையின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பும் நடந்தது. 2010-11 ஆம் ஆண்டிற்கான, புதிய தலைவராக செல்வன்,ஜினோட்டோ(S/O.திரு,ஆஸ்பன் வி.ராயன்) பொறுப்பேற்றார்.அதனை தொடர்ந்து பங்குதந்தை இல்லத்தில்,பங்குதந்தையின் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டு,கடந்த ஆண்டின் தலைவர் திரு.கரோல் பர்னாந்து புதிய தலைவருக்கு பொன்னாடை போர்த்தி,பொறுப்பினை வழங்கினார்.
தேநீர் விருந்துடன் விழா இனிதே நிறைவுற்றது.






புதிய சபை நிர்வாகிகள் 


செல்வன்.ஜினோட்டோ ,பங்குதந்தை அருட்திரு,ஜோசப்  அடிகளார்,திரு.கரோல் பர்னாந்து.

புதிய தலைவருக்கு பொன்னாடை 

முந்தைய தலைவருக்கு,புதிய தலைவரின் பொன்னாடை 

புதிய தலைவரின் ஏற்புரை 

புதிய தலைவரின் இல்லத்துக்கு.....



கத்தோலிக்க திருச்சபை இந்த ஆண்டை  இளைஞர் ஆண்டாக அறிவித்திருக்கும் இந்த 
நேரத்தில், புதிய செயற்குழு நிர்வாகிகளும்,உறுப்பினர்களும் சிறப்பாக பணிபுரிய வாழ்த்தி வரவேற்கிறோம்.

0 comments

Post a Comment

தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)

PattanamPortal. Powered by Blogger.

Back To Top