திருச்செந்தூர், : திருச்செந்தூரில் விபத்து களை தவிர்க்க வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்செந்தூர் அரசு மருத்துவமனை அருகே திருநெல்வேலி சாலை சந்திக் கும் இடத்தில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. திருநெல்வேலி சாலையிலிருந்து திருச்செந்தூருக் குள் நுழையும் வாகனங்கள் அரசு மருத்துவமனை சந்திப்பில் இடது மற்றும் வலது புறங்களில் வேகமாகத் திரும்புவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் திருநெல்வேலி சாலையிலிருந்து பழைய பஸ் நிலையத்திற்கு திரும்பும் பஸ்கள் அதி வேகமாக இடதுபுறம் திரும்புவதால் ஆர்ச் பகுதியிலிருந்து பழைய பஸ் நிலையம் செல்லும் மற்றும் வடக்கேயிருந்து தெற்கு நோக்கி வரும் வாகனங்கள், நடந்து செல்வோர் நிலைகுலைகின்றனர்.
இதேபோல் திருச்செந் தூர் தெப்பக்குளம் சந்திப்பு பகுதியிலும் பரமன்குறிச்சி மற்றும் குலசேகரன்பட்டினம் சாலைகளில் இருந்து வரும் வாகனங்கள் வேக மாக வந்து நகருக்குள் நுழை வதால் அங்கும் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்கின்றன. எனவே அரசு மருத்துவ மனை மற்றும் தெப்பக்குளம் சந்திப்புகளில் வேகத்தடைகள் அமைத்தால் விபத்துகளை தவிர்க்கலாம் என பொதுமக்கள் கருதுகின்றனர். எனவே திருச்செந்தூரில் அரசு மருத்துவமனை சந்திப்பு பகுதியில் உள்ள திருநெல்வேலி சாலை யிலும், தெப்பக்குளம் சந்திப்பில் பரமன்குறிச்சி மற்றும் குலசேகரன்பட்டினம் செல்லும் சாலைகளிலும் வேகத்தடைகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
0 comments
Post a Comment