திருச்செந்தூரில் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் மார்ச் 6ம் தேதி மெகா கோலப்போட்டி நடக்கிறது. இதில் முதல் பரிசுக்கு 5பவுன் தங்கசெயின் பரிசு வழங்கப்படுகிறது. தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் 59வது பிறந்தநாளை முன்னிட்டு
திருச்செந்தூர் எம்எல்ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் மாபெரும் மெகா கோலப்போட்டி வரும் மார்ச் 6ம் தேதி திருச்செந்தூர் எல்ஐசி பின்புறம் பகல் 2 மணிக்கு நடக்கிறது. இதில் முதல் பரிசுக்கு 5 பவுன் தங்க செயினும், இரண்டாம் பரிசுக்கு 3 பவுன் தங்க நெக்லஸ்சும், மூன்றாம் பரிசு 1 பவுன் தங்க கம்மல் ஜிமிக்கியும் வழங்கப்படுகிறது. போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் திருச்செந்தூர் எம்எல்ஏ., அலுவலகம் எதிரில் இன்று (26, 27) ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை தங்கள் குடும்ப அட்டையுடன் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளவும். பதிவு செய்து கொள்பவர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள முடியும். ஒரு ரேஷன்கார்டுக்கு ஒருவர் மட்டுமே கலந்து கொள்ளலாம். கலந்து கொள்பவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். இத்தகவலை திருச்செந்தூர் எம்எல்ஏ.,அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)
Sunday, February 27, 2011
தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)
PattanamPortal. Powered by Blogger.
0 comments
Post a Comment